ஜம்மு – காஷ்மீரின் சம்பா சர்வதேச எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் வாயிலாக வீசப்பட்ட மூட்டையில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு செயலிழப்பு கருவிகள் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் அங்கிருந்த மர்ம மூட்டையை சோதனையிட்டதில், மூன்று சீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், 48 தோட்டாக்கள், நான்கு கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றை சம்பா மாவட்ட போலீசாரல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.