தென் கொரியாவில் நடந்துவரும் ஜூனியர் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் சித்தார்த் சவுத்தரி (அதிகபட்சமாக 19.52 மீ., எறிந்து) தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன் 19.11 மீ., எறிந்ததே இவரது சிறந்த செயல்பாடாக இருந்தது. இத்தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை உறுதிசெய்துள்ளன.