சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதல்: 4 காவலர்கள் படுகாயம்

0
174

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள குத்ரு போலீஸ் எல்லைக்குள்பட்ட ஜெய்கூர் முகாமில் நேற்று இரவு 11 மணியளவில் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையினர் மீது நடத்திய இந்தத் தாக்குதலில் 4 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த இரு காவலர்கள் சிகிச்சைக்காக விமானம் மூலம் ராய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் பி. சுந்தர்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்களின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here