தமிழக டென்னிஸ் வீரர் விஸ்வா மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

0
164

டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் விஸ்வா இவர் 83 வது சீனியர் மற்றும் தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொள்வதற்காக கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி சாலை மார்க்கமாக பயணித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிரக் ஒன்று விஸ்வா பயணித்த வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் அவர் பலியானார். அவரது உடல் இன்று தமிழகம் வந்து சேர்ந்தது.இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சக வீரர்களால் போற்றப்பட்ட இவர், பல போட்டிகளில் பங்கேற்று தனித்துவத்துடன் திகழ்ந்தார். மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருடன் கவலையை பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here