உத்தரப் பிரதேச எம்.பி. & எம்.எல்.ஏ.க் களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் வாரணாசி நீதிமன்றம் முன்னாள் எம்.பி. முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ அஜய் ராயின் சகோதரர் அவதேஷ் ராய் அஜய் ராயின் வீட்டு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். முக்தார் அன்சாரியின் செல்வாக்கு காரணமாக அவர்மீது இருந்த வழக்கு விசாரிக்கப் படாமலேயே 30 ஆண்டு களுக்கும் மேலாக நீடித்து வந்தது. இப்போது தீர்ப்பு கிட்டியுள்ளது. குற்றவாளிகள் எவரும் தப்பமுடியாது என யோகி சூளுரைத்தது நினைவுக்கு வருகிறது.