தமிழ்நாட்டில் மிகப் பெரிய ரயில் விபத்து தவிர்ப்பு நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து போல், தமிழ்நாட்டில் ஏற்படவிருந்த விபத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் உள்ள சிக்னலை இளைஞர் ஒருவர் உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சிக்னலில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கோகுலை கைது செய்தனர். விசாரணையில் மதுப்போதையில் ரயில்வே சிக்னலை உடைக்க முயன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.