5 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

0
186

போபால், ஜூன் 27. மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை சென்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் ஐந்து வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தை அடைந்த மோடி, அங்கிருந்து ஐந்து ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரண்டு நேரடியாகவும் , மூன்று மெய்நிகர் முறையிலும் துவங்கப்பட்டது.

ஒரே நாளில் இவ்வளவு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவது இதுவே முதல் முறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here