சீன இராணுவத்தில் திபத்திய வீரர்கள் – இந்திய எல்லை பகுதிகளில் ரோந்து பணி

0
134

அருணாச்சல் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள இந்திய-திபத் எல்லைப் பகுதியில் சீன இராணுவத்தால் படையில் இணைக்கப்பட்ட திபத்தியர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதிஉயர பகுதியில் சீன இராணுவத்திற்கு துணையாக இந்த திபத்தியர்கள் படையில் இணைக்கப்பட்டுள்ளனர்.தற்போது சீன வீரர்களுடன் ரோந்து பணியில் இந்த திபத்தியர்களும் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.திபத்தில் இருந்து வீட்டிற்கு ஒருவரை இராணுவத்தில் இணைத்து அவரை சீனாவிற்கு விசுவாகமாக மாற்றி செயல்பட வைக்க வேண்டும் என சீனத்தலைமை இராணுவ கமாண்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here