விவசாயிகளுடன் மத்திய அரசு தோளோடு தோள் நிற்கும் – பிரதமர் மோடி

0
74

ராஜஸ்தானின் சிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்காக 1 லட்சத்து 25 ஆயிரம் கிசான் சம்ரித்தி கேந்திரா மையங்களை நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார். பி.எம். கிஸான் திட்டத்தின் கீழ் 17 ஆயிரம் கோடி ரூபாயை 8 கோடியே 50 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தும் நிதியுதவி திட்டத்தின் 14-வது தவணை விநியோகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பின்னர் வேளாண் மக்களின் வலியையும் வேதனையையும் புரிந்து கொள்ளும் ஆட்சி தற்போது நாட்டில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here