பெங்களூருவில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத்தினர் 3 பேர் கைது- என்.ஐ.ஏ.

0
158

பெங்களூருவில் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளுக்கு தெரியவந்தது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த கலில் சபரசி, அப்துல் காதிர் மற்றும் முகமது ஷாகித் ஆகியோர் என்பதும், அவர்கள் போலி ஆதார் உள்ளிட்ட பல்வேறு அரசு அடையாள அட்டைகளை பயன்படுத்தி பெங்களூருவில் வசித்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பெல்லந்தூர் போலீசில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பெங்களூருவில் ஒட்டுமொத்தமாக வங்கதேசத்தை சேர்ந்த 3 லட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட இருந்த 5 பயங்கரவாதிகள் கைதான நிலையில் தற்போது 3 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here