“தேசமே முதல் முக்கியம்” – பிரதமர்

0
134

டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பிரதமர் மோடி பேசுகையில் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உருவாகி உள்ளது. இந்திய நவீனத்தை நோக்கி செல்கிறது. கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு உலக அளவில் கொண்டு செல்லப்பட்டனர். இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நன்றி. தேசமே முதல், முக்கியம் என்ற நோக்கில் இந்தியாவை கட்டமைப்பதில் முழு கவனம் செலுத்துகிறோம். இந்தியா உலகில் பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கோவிட் பாதிப்பிற்கு பின் இந்தியாவை உலக நாடுகள் வியப்புடன் பார்க்கிறது. 200 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி போட்டு சாதனை படைத்தோம். இந்தியா உலகை வழிநடத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளது. செயல்பாடு, மாற்றங்கள், சீர்திருத்தங்கள் என்பதை மந்திரமாக கொண்டு இந்தியாவை உருவாக்கி வருகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here