தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பின் திருச்சூர் மண்டல தொகுதியின் அமீர் (தலைவர்) சையத் நபீல் அகமது செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டார்.
இவர் கேரளாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பதுங்கி இருந்துள்ளார். நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், அவரால் என்ஐஏ-வின் ரேடாரில் இருந்து தப்ப முடியவில்லை. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியை ஏற்பாடு செய்வதற்காக ஏடிஎம் இயந்திரங்களை கொள்ளையடிக்கும் வடிவமைப்பை அவரது குழு வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 2023 இல் கோட்டாவில் ஒரு அஷ்ரஃப் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஏடிஎம் கொள்ளையடிக்கும் சதித்திட்டத்துடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அஷ்ரப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நபீல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.