‘நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி’ – எஸ்.ஆர்.எம்.,மில் நூல் வெளியீடு

0
1731

கூடுவாஞ்சேரி- பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் சார்பில், தமிழ்ப்பேராயம் நிகழ்ச்சி, நேற்று காலையில் நடந்தது. அதில், பேராயத்தின் தலைவர் எழுதிய ‘நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி’ என்ற புதிய நுால் வெளியிடப்பட்டது.
எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் பாரிவேந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, ஜார்கண்ட் மாநிலத்தின் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இதில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த கொடிகாத்த குமரன், சுப்பிரமணிய சிவா ஆகியோர் பிறந்த தினத்தை முன்னிட்டு, இரண்டு தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேராசிரியர் கரு.நாகராஜன் எழுதிய ‘நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி’ என்ற புத்தகத்தை, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here