ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்கலாம்

0
106

அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் வெளிநாட்டில் இருந்து நிதி பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின், FCRA உரிமம் பெற்று வெளிநாட்டில் வாழ்பவர்களிடம் நன்கொடை திரட்டலாம். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு, இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது மத்திய அரசு உரிமம் வழங்கி உள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து நன்கொடை அளிப்பவர்கள், குறிப்பிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு மட்டும் அளிக்க வேண்டும் எனவும் அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here