அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த விழவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்,உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பத்ம விபூஷன் விருது பெற்ற பிரபல நடிகர் ஸ்ரீ விக்டர் பானர்ஜி, பிரபல இசையமைப்பாளரும், தபேலா இசைக்கலைஞருமான ஸ்ரீ விக்ரம் கோஷ்ஜி உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள இல்லத்திற்கு சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்ஜி ஜனவரி 22 ஆம் தேதி விளக்குகள் ஏற்றுவதற்காக தீபங்களையும் அவர்களுக்கு வழங்கினார்.
Home Breaking News அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரபல நடிகர் ஸ்ரீ விக்டர் பானர்ஜிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.