மியான்மரில் ஒரு ட்ரோன் சர்ஜிகல் ஸ்ட்ரைக்

0
516

இந்திய இராணுவம் அனுப்பிய் ட்ரோன்கள் மியான்மரின் உள்ளே நடத்திய தாக்குதலில் உல்ஃபா(ஐ) ULFA(I) (பரேஷ் பருவா குழுவினர்) போராளிகள் பலர் காயமடைந்தனர். உல்ஃபா முகாம் தகர்க்கப்பட்டது. இத்தாக்குதலில் உல்ஃபா போராளிகள் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிகிறது. உல்ஃபா முகாம் மீது அதிகாலை 4.10 க்கு 4.20 க்குள் அடுத்தடுத்து 3 குண்டுகள் போடப்பட்டுள்ளன.கடந்த வாரம் மத்திய அரசு அசாம் அரசு மற்றும் உல்ஃபா குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை இக்குழுவினர் ஏற்க மறுத்துவிட்டனர்.இக்குழுவின் தலைவன் சீனாவில் ஒளிந்து கொண்டுள்ளான். சீன ஆதரவுடன் செயல் பட்டு வரும் பிரிவினை அமைப்பு இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here