முதல் முறை வாக்காளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுகிறார்

0
90

இன்று வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதல் முறை வாக்காளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1 கோடி முதல் முறை வாக்காளர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் பகுதிகளிலிருந்து முதல் முறை வாக்காளர்கள் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக, ஒரு பிரதமர், முதல் முறை வாக்காளர்களிடம் உரையாற்றவிருக்கிறார் என்றும், பிரதமருடன் நேரடியாக உரையாட மிகவும் ஆர்வத்தோடு இருப்பதாகவும் இன்றைய உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் இளம்தலைமுறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here