நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்.ஐ.ஏ. ரெய்டு

0
644

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு படையினர் (என்.ஐ.ஏ.,) ரெய்டு நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக் ஆஜராகுமாறு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் இன்று (பிப்., 02) கோவை ஆலாந்துறை ஆர்ஜி நகரில் ரஞ்சித், காலப்பட்டி முருகன், திருச்சி வயலூரில் சாட்டை முருகன், தென்காசி சிவகிரி இசைமதிவாணன், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியின் முருகன் விஷ்ணு, உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடக்கிறது. தடை செய்யப்பட்ட விடுதலைபுலி மற்றும் தேச விரோத சக்திகளுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த சர்ச்சையின் அடிப்படையில் இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here