ஆன்மீக மறுமலர்ச்சி மற்றும் கல்விப் பணியில் பெரும் பங்காற்றிய சிவகுமார சுவாமி பிறந்த தினம் இன்று

0
27

சிவக்குமார சுவாமி ஏப்ரல்1, 1907ஆம் ஆண்டு பிறந்தார். ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கல்விப் பணிகளில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளார்.
இவர் கர்நாடகத்தைச் சேர்ந்த சித்த கங்கா மடத்தின் வீர சைவப் பிரிவின் முக்கிய தலைவர். துவக்கப் பள்ளி முதல் பொறியியல் முதலான கல்லூரி படிப்பு வரை இவர் மொத்தம் 132 கல்வி நிறுவனங்களை தோற்றுவித்துள்ளார்.இவரது குருகுலத்தில் 10000 மாணவர்களுக்கு இலவச உணவு உடை இருப்பிடத்துடன் கல்வி வழங்கப்படுகிறது.இவரது மனிதநேய பணியைப் பாராட்டி கர்நாடக பல்கலைக்கழகம் 1965ஆம் ஆண்டு இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. மேலும் அவரது நூறாவது பிறந்த ஆண்டான 2007ஆம் ஆண்டு கர்நாடக அரசு மாநிலத்தின் உயர்ந்த விருதான கர்நாடக ரத்னா விருதினை அளித்தது. 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூஷன் விருது அளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here