பாரத நாட்டில் எதிர்க்கட்சி வலிமையாக இல்லை – ராகேஷ் திகைத்

0
144

பாரத நாட்டில் எதிர்க்கட்சி வலுவாக இல்லையென விவசாயிகள் சங்கத்தின் தலைவராக தன்னை காட்டிக்கொள்ளும் ராகேஷ் திகைத் கூறி உள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க தலைவரான ராகேஷ் திகைத், யுத்வீர் சிங் உள்ளிட்டோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை புதன்கிழமை சந்தித்தனர்.

சந்திப்பு குறித்து திகைத் கூறுகையில் நாட்டில் எதிர்க்கட்சி வலிமையாக இல்லை. அதனால் தான் நாங்கள் தெருக்களில் அமர்ந்துள்ளோம். எதிர்க்கட்சி வலிமையாக இருந்திருந்தால் நாங்கள் இதைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. என தெரிவித்தார். அது காங்கிரஸ் மேல் மட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்பட்டதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here