ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர் –இ-தொய்பாவின் முக்கிய குற்றவாளி சுட்டு கொலை.

0
147

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் லஷ்கர் –இ-தொய்பா அமைப்பின் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.


ஜம்மு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டம், செக் சாதிக் கான் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது பாதுகாப்பு படை. அப்போது தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று அதிகாலை வரை நீடித்த இந்த மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர் கமாண்டர்களில் ஒருவரான இஷ்ஃபக் தார் என்கிற அபு அக்ரம் ஆவார். அந்த இஸ்லாமிய பயங்கரவாதி அபு அக்ரம் பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல்கள், அப்பாவி மக்கள் கொலை, இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றுதல் ஆகியவற்றை திட்டமிட்டுவதிலும் செயல்படுத்துவதிலும் முக்கிய கருவியாக இருந்தார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here