பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை. இதற்கும் ஆப்கனுக்கும் தொடர்பா?

0
186

பாகிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


பாகிஸ்தானில் லோரலை மாவட்டம், கோஹர் அணை பகுதியில் காவல்துறையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இந்த சண்டையில் 7 இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 பேர் தப்பியோடிவிட்டனர். மேலும் இச்சம்பவத்தில் அதிகளவு வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். பலூசிஸ்தான் பகுதியில் அண்மை காலமாக பயங்கரவாத தொடர்பான மோதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்த சம்பவங்களுக்கும் ஆப்கனில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here