ஸ்ரீ நாரதர் விருது – 2021

0
334

விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றன.

 

உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில பாரத அளவில் சிறந்த பத்திரிக்கையளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவித்து விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக திருச்சியில் நடைபெற்ற ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழாவில், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ ஆரோக்கியசாமி, ஸ்ரீ குணசேகரன் ஆகியோர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது – 2021 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முனைவர். ஸ்ரீ தெய்வநாயகம் அவர்கள் தலைமை தாங்கினார். ஆர்எஸ்எஸ் அகில பாரத இணை பொது செயலாளர் ஸ்ரீ அருண்குமார் ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை பின்தொடர்ந்து VSK DTN செயலி வெளியீடப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில் தென்பாரத அமைப்பாளர் ஸ்ரீ செந்தில்குமார் ஜி, தென்பாரத செயலாளர் ஸ்ரீ ராஜேந்திரன் ஜி, தென்பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் ஸ்ரீ ஸ்ரீராம் ஜி, தென்தமிழக அமைப்பாளர் ஸ்ரீ ஆறுமுகம் ஜி, தென்தமிழக ஊடகத்துறை பொருப்பாளர் ஸ்ரீ மோகன் ஜி, தென்தமிழக ஊடகத்துறை இணை பொருப்பாளர் ஸ்ரீ சூரியநாரயணன் ஜி மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here