கோயில் சொத்துக்கள் நிலம் குறித்து மேலும் விழிப்புணர்வு தேவை

0
377

சென்னை உயர்நீதிமன்றத்தின் சென்னை பெஞ்ச், நீதிபதி ஆர். சுரேஷ் குமார், 4/12/2021 அன்று, “கடவுளின் சொத்துக்களைப் பறித்து அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றம் செய்யக்கூடாது” என்று கூறியுள்ளார்.. மேலும், “கோயில் நிலத்தை மூன்றாம் தரப்பினரின் நலனுக்காக சுரண்டுவது தொடர்பான விஷயங்களில் அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் சென்னை புறநகர் பகுதியான திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ளது. இதில் 22 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் கட்டிட ஒப்பந்த,குத்தகை நீட்டிப்பு கெட்டு தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

            சென்னை உயர் நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை பெஞ்ச்கள் ஆக்கிரமிப்புகள், குத்தகைப் புதுப்பித்தல் சம்பந்தப்பட்ட மற்றும் ஆர்வலர்கள் தாக்கல் செய்த பொதுநல வழக்குகள் தொடர்பாக “பரபரப்பான” தீர்ப்புகளை வழங்கி வருகின்றன.

     கோயில் நிலம்  எப்போதும் கோயில்களிடமே இருக்கவேண்டும். : கோயில் நிலங்களை பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படக் கூடாது (சென்னை உயர் நீதி மன்றம் 22/06/2021)

கோவில் நிலங்களை கோவிலின் பயன்பாட்டுக்கே மட்டுமே பயன்படுத்த முடியும் (சென்னை உயர் நீதி மன்றம் 22/06/2021)

கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்க சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும். (சென்னை உயர் நீதிமன்றம் 15/09/2021)

கோவில் நிலங்கள் கடவுளுகே சொந்தம்(சென்னை உயர் நீதிமன்றம் 23/11/2021).

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு கோயில் நிலத்தை பயன்படுத்த அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

     மாநிலத்தில் உள்ள கோவில்கள் வைத்திருக்கும் நிலங்கள், வாடகை நிர்ணயம் செய்யும் முறை, வாடகை வசூல், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியல் போன்ற விவரங்களை வழங்குமாறு அறநிலைய துறைக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இந்த உத்தரவை எப்போதும் கடைப்பிடித்ததில்லை.. சமீப காலம் வரை HR&CE துறை மட்டுமே ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியும். தற்போதைய அரசாங்கம் செப்டம்பர் 2021 இல், அறநிலைய சட்டத்தை திருத்தி தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றியது, இது  ஜாமீனில் வெளிவர முடியாத” குற்றமாக மாற்றியது.

      நீதித்துறையின் இந்த கண்டிப்புகளால் கூட திமுக அரசை தடுக்க முடியவில்லை. அரசாங்கம் கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட தங்க நகைகளை உருக்குதல் மற்றும் மாநிலத்தில் 10 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியது. இறுதி தீர்ப்புகள் நிலுவையில் உள்ள நிலையில் உயர் நீதி மன்றம் பொது நல வழக்குகள் மீது  இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது.

      ஏப்ரல் 2021 இல், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்த பொது, ​​ஜக்கி வாசுதேவ் #FREE TN Temples” என்று “மிஸ்டு கால்” ட்விட்டர் பிரச்சாரத்தை # தொடங்கினார், இது பெரும் வெற்றியைப் பெற்றது. மாநிலத்தில் உள்ள இந்துக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே அரசின் செயலற்ற தன்மைக்கும் ஒப்புக்கு நடவடிக்கை எடுப்பதற்கும் காரணம். கோயில் மீட்பு நடவடிக்கைகலை பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத்,இந்து முன்னணி மற்றும் தனிப்பட்ட ஆர்வலர்கள் முன்னெடுத்து செல்கின்றனர். இனிவரும் நாட்களில் இந்து சமுதாயம் அரசின் இந்து விரோத செயல்களை உணர்ந்து அரசை செயல்பட வலியுறுத்தும் என நம்புவோமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here