உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது-வெளியுறவுதுறை அமைச்சர்

0
232

      உலக அரங்கில் இந்தியாவின்  அந்தஸ்து உயர்ந்துள்ளது,மேலும் நாட்டிடம் இருந்து உலகம் அதிகம் எதிர்பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    கோவிட்-19 தொற்றுநோய் முன்னெப்போதும் இல்லாத சவாலை நாட்டிற்கு முன் வைத்துள்ளது என்று அவர் கூறினார்.

     தொற்றுநோய்க்குப் பிறகு வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மற்றும் புலம்பெயர் சமூகத்திற்கு அரசாங்கம் உதவி வழங்கிய விதத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார், மேலும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதில் பல நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் ஆற்றிய பணிகளையும் அவர் குறிப்பிட்டார்.

         ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், தொற்றுநோயைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிக்கித் தவித்த லட்சக்கணக்கான இந்திய குடிமக்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தது, ஆகஸ்ட் 15 ஆம் தேதி காபூலில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய நாட்டினரையும் மற்றவர்களையும் வெற்றிகரமாக மீட்ட நடவடிக்கை ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here