மூத்த பா.ஜ.க தலைவர் ஐயப்பன் பிள்ளை காலமானார்

0
394

மூத்த பா.ஜ.க தலைவரும் வழக்குரைஞருமான ஐயப்பன் பிள்ளை மாரடைப்பால் காலமானார். ஜனவரி 5 ம் தேதி அன்று திருவனந்தபுரத்தில் காலமான அவருக்கு வயது 107.
1940ல் சுதந்திரபோரட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டார். 1980 முதல் 1987 வரை பா.ஜ.க கேரள மாநில துணைத்தலைவராக இருந்த அவர் மாநில பொருளாளராகவும் பணியாற்றினார். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையேற்ற கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஏக்தா யாத்திரையில்  இவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here