மத்திய அரசின் திட்டம்- விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா

0
327

துவக்கம்:2015-2016
திட்ட காலம்: 2015-2016 முதல் 2019-22 வரை
குறிக்கோள்:உறுதி செய்யப்பட்ட நீர் பாசன திட்டத்தின் கீழ் வேளாண் பயிர் செய்யக்கூடிய பகுதிகளை விரிவு படுத்துதல்,வேளாண்மையில் நீர் பயன்பாட்டு திறனை அதிகரித்தல் மற்றும் வேளாண்மையில் நீடித்த பாதுகாப்பு நடைமுறைகளை அதிகரித்தல், பண்ணைகளில் நீருக்கான அணுகலை மேம்படுத்துதல்
நிதியளித்தல்:மத்திய,மாநில அரசுகளால் பகிர்ந்தளிக்கப்படும் நிதியானது நபார்ட் வங்கியால் வழங்கப்பட்டு வருகிறது.
திட்டக்கூறுகள்: இந்த திட்டமானது மூன்று அமைச்சகங்களின் பின்வரும் முந்தைய மூன்று திட்டங்களை உள்ளடக்கியதாகும்
• மத்திய நீர்வள அமைச்சகத்தின் துரிதப்படுத்தப்பட்ட நீர் பாசன பயன் திட்டம்
• மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நீர் பிடிப்பு மேலாண்மை திட்டம்
• நீடித்த மேலாண்மைக்கான பண்ணை நீர் மேலாண்மை தேசிய திட்டம்
செயல்படுத்தும் நிறுவனங்கள்:
மத்திய வேளாண்மை அமைச்சகம், மத்திய நீர் வள அமைச்சகம், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம்
பயன்கள்: ஓவ்வொரு நீர்துளிக்கும் அதிகப்படியான விளைச்சல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here