தியாகராஜர் ஆராதனை ஒரு நாள் மட்டுமே நடைபெறும்

0
851

திருவையாற்றில் ஆண்டு தோறும் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை இந்த ஆண்டு ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அவர் சித்தி அடைந்த பகுள பஞ்சமியான ஜனவரி 22ம் தேதி அன்று மட்டும் ஆராதனை நடத்த தியாக பிரம்ம மகோத்சவ சபை தெரிவித்துள்ளது. அன்று இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி
தியாக பிரம்மத்துக்கு இசையஞ்சலி செலுத்துவார்கள். விழாப்பந்தலில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பங்கு கொள்ளும் இசைக்கலைஞர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here