ஜம்மு காஷ்மீர் சங்கல்ப திவஸ் பிப்ரவரி 22

0
149

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு, டோக்ரா வம்சத்தின் மகாராஜா ஹரி சிங் ஆட்சி செய்த ஜம்மு- காஷ்மீர் சமஸ்தானம், அக்டோபர் 26, 1947 இல் இந்திய யூனியனில் இணைந்தது. பழங்காலத்திலிருந்தே ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இருப்பினும், 1947 பிரிவினைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரை சட்டவிரோதமாக கைப்பற்ற பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தது. பிரதமர் நேருவின் அலட்சியப் போக்கினால் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது. இது போர் நிறுத்தத்தை அறிவிக்க வழி வகுத்தது,
இதனால் கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் ஷேக்ஸ்பியர் பள்ளத்தாக்கு உட்பட 90,000 கிமீ இந்தியப் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. இந்திய ராணுவத்தால் பாகிஸ்தானை முறியடித்து, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து
அவர்களை வெளியேற்ற செய்ய வாய்ப்பு இருந்தாலும், அப்போதைய அரசியல் தலைமையின் பிடியால் அது தடைபட்டது.

1965 மற்றும் 1971 போர்களில் நமது துணிச்சலான வீரர்கள் பாகிஸ்தானை போர்க்களத்தில் தோற்கடித்த போதிலும், பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள நிலம் விடுவிக்கப் படாமல் இருப்பதை உறுதிசெய்த ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளால் இந்தியா பின்னடைவையே சந்திக்க நேர்ந்தது.

இந்நிலையில், 22 பிப்ரவரி 1994 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 22, 1994 தேதியிட்ட இந்த நாடாளுமன்றத் தீர்மானம், சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகள் இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதை மீண்டும் வலியுறுத்தியதுடன், அதை மீட்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெளிவுபடுத்தியது.

அப்போதிருந்து, பிப்ரவரி 22 ” “உறுதியேற்பு நாள்”அதாவது “சங்கல்ப திவஸ்” என்று அறியப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here