ரத்தன் டாடாவுக்கு அசாம் அரசின் உயர்ந்த குடிமகன் விருது

0
527

தொழிலதிபர் ரத்தன் டாட்டா அஸ்ஸாம் அரசால் முதல் உயரிய விருதான “அசோம் பைபவ்” விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரத்தன் டாடா, அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் சிகிச்சை துறையில் மகத்தான பங்களிப்பிற்காக அசோம் பைபவ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசாமில் மாநிலத் துறையுடன் இணைந்து 20 புற்றுநோய் சிகிச்சை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை டாடா டிரஸ்ட் அமைத்து சேவை ஆற்றி வருகிறது. இதற்காக ரத்தன் டாட்டாவுக்கு “அசோம் பைபவ்” விருது வழங்கப்படுகிறது. கவுகாத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் அசாம் கவர்னர் பேராசிரியர் ஜகதீஷ் முகி விருதினை டாடாவுக்கு வழங்குவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here