கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி

0
434

கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகளின் கீழ் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) இதற்கு அனுமதி அளித்துள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வயது வந்தோருக்கு மட்டும் தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here