மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நீர்பாசன இணைப்பு திட்டம் ரூ.46,605 கோடியில் செயல்படுத்தப்படும். கங்கை – கோதாவரி, கிருஷ்ணா – காவிரி நதிகளை இணைக்கப்படும். இதற்கான இறுதி திட்டம் தயாராகி உள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனுமதி கிடைத்த உடன் நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் அவர் தெரிவித்துள்ளார். இது தமிழக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.