ஆம்பூரில் போலி தங்க காசுகள் கொடுத்து ஓட்டு வாங்கிய திமுக பிரமுகர்

0
323

ஆம்பூரில், போலி தங்க காசுகள் கொடுத்து ஓட்டு வாங்கி தலைமறைவான வேட்பாளர் மற்றும் திமுகவை சேர்ந்த அவரது கணவரை பொது மக்கள் தேடி வருகின்றனர்.

ஆம்பூர் நகராட்சியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் துரைப்பாண்டியின் மனைவி மணி மேகலை சுயேச்சையாக போட்டியிட்டார்.

வேட்பாளர் மணிமேகலை கணவர் துரைபாண்டியுடன் வந்து, தங்களுக்கு ஒட்டு போடும்படி கேட்டு, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கிராம் தங்க காசு என 1,500 பேருக்கு கொடுத்தார். கடையில் கொடுத்து சோதனை செய்த போது அவை அனைத்தும் பித்தளை என தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து தலைமறைவாகியுள்ள மணிமேகலையையும் துரைபாண்டியையும் மக்கள் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here