மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அரசில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடும் போது விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்படும் சிரமம் எனக்கு தெரியும். கடந்த 2013ல் நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபோது, ‘சி.பி.ஐ., கூண்டுக்கிளி’ என உச்ச நீதிமன்றமே விமர்சனம் செய்திருந்தது.
இப்போது “நிலைமை அப்படி இல்லை”. நரேந்திர மோடி நம் பிரதமராக பதவி வகிக்கிறார். சி.பி.ஐ., இப்போது சுதந்திரமாக செயல்படுகிறது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘சி.பி.ஐ.,யின் நம்பகத்தன்மை பொது ஆய்வுக்கு உட்பட்டது. விசாரணை அமைப்புகள் அனைத்தையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவர வேண்டும்’ என கூறினார் .