ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவம் மற்றும் போலீஸ் இணைந்து அதிரடிச் சோதனை நடத்தியதில், லஷ்கர் — இ – தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, சீனாவில் தயாரிக்கப் பட்ட கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. பந்திபோரவின் ராக் ஹஜின் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் மற்றொரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. ஐந்து பேரிடமும் விசாரணை நடக்கிறது. இவர்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.