மதுரை ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

0
275

293-வது மதுரை ஆதீனமாக ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதினத்தின் 292வது பீடாதிபதியாக இருந்துவந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த 13ஆம் தேதி முக்தி அடைந்தார்.
இதனையடுத்து 293-ஆவது மதுரை ஆதினமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகளுக்கு பட்டம் சூட்டப்பட்டது. இந்நிலையில் 10 நாள்கள் நிறைவடைந்த நிலையில் திங்கள் கிழமை பீடாதிபதியாக பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here