பாலக்காடு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை வழக்கு – 4 பேர் கைது..!

0
280

பாலக்காடு நகரில் கடைக்குள் வேலை செய்து கொண்டு இருந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சீனிவாசனை, உள்ளே புகுந்து மர்ம நபர்கள் வெட்டிக்கொன்றனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் உருவானது. மேலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவில், அந்த வழக்கு தொடர்பாக பாலக்காடு பகுதியை சேர்ந்த முகமது நிசார் (வயது 31), ரியாசுதீன் (28), முகமது (29), சகத் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களை பாலக்காடு தெற்கு போலீஸ் நிலையத்தில் வைத்து, தீவிர விசாரணை நடத்தினர். அதில் கொலை வழக்கில் மொத்தம் 12 பேருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதனால் மற்றவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று ஏ.டி.ஜி.பி. விஜய் சாகர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here