இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் தமிழகம் : கவர்னர் ரவி

0
164

சென்னை எம்ஆர்சி நகரில் மீன்வளம் பற்றிய கருத்தரங்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கவர்னர் ரவி பேசியது: இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் தமிழகம்தான். இந்தியாவை உலகின் நம்பர் ஒன் நாடாக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற பிரதமர் செயல்படுவதால் ‛ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என கூறுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here