புதுச்சேரி கிரீடா பாரதி பேரணி

0
278

புதுச்சேரி மாநில கிரீடா பாரதி அமைப்பு சார்பில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி நடந்தது. இப்பேரணியை கடற்கரை சாலை காந்தி திடலில் ஆச்சார்யா கல்விக் குழும மேலாண்மை இயக்குனரும், வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிரீடா பாரதியின் தலைவருமான அரவிந்தன் துவக்கி வைத்தார். பேரணி, நோணாங்குப்பம் படகு குழாம் வரை சென்று நிறைவு பெற்றது. பேரணியில், நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். தலைவர் கார்த்திகேயன், இணைச் செயலாளர் தணிகை குமரன், மற்றும் புதுச்சேரி மாநில கிரீடா பாரதியின் ஹாக்கி பொறுப்பாளர் குமரேசன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here