நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை- உயர்நீதிமன்றம்

0
206

சென்னை:நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை எனக்கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பில்லை எனக்கூறியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கரமிப்புகளை அகற்றிய மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூறியதாவது: நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை. அதிகாரிக்கு தெரியாமல் ஆக்கரமிப்பு நடக்க வாய்ப்பில்லை. இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும். தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தினால், பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் மூலம் இயற்கை நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here