ஆர்.எஸ்.எஸ் மேல்முறையீட்டு மனு

0
117
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 2ம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்கு காவல்துறை அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட மனு பரிசீலிக்கப்படாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகிகள் 50 பேர் மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பல்வேறு நிபந்தனைகளுடன் நவம்பர் 6ம் தேதி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க காவல்துரைக்கு உத்தரவிட்டார்.ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி, கோவை, பல்லடம் உள்பட 6 இடங்களில் அனுமதி வழங்க முடியாது.கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் மட்டும் ஊர்வலம் செல்லலாம்.மற்ற இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்திக்கொள்ளலாம் என்று காவல்துறை தெரிவித்தது.இதுதொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொரப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உளவுத்துறை அறிக்கையின்படி, காவல்துறை உத்தரவை ஏற்றுக்கொண்டார்.இதை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜே.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘முதலில் நிபந்தனைகளுடன் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பிறகு அந்த உத்தரவில் மாற்றம் செய்து சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது தவறு. அவரது உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.அக்டோபர் 2ம் தேதி மற்றும் அதன்பிறகு பல்வேறு அமைப்புகளுக்கு போராட்டங்கள் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.இப்படி சுமார் 500 போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஆர்.எஸ்.எஸ்.அமைப்புக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிரது.தற்போது ஜனவரி 22 மற்றும் 29ம் தேதி அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க உள்ளோம்.இதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.வேறு தேதியில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கினாலும் அதை ஏற்க தயாராக உள்ளோம்” என்று கூறினர்.காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கிற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு அடுத்த விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here