மூத்த ப்ரசாரக் காலமானார்

0
609
ஶ்ரீ பிரபாகர் ராவ் ஆம்புல்கர் (84) இன்று அதிகாலை காப்ரி விவேகானந்த மெடிகல் மிஷன் மருத்துவ மனையில் காலமானார்.
சிறு வயது முதல் ஸ்வயம்சேவக். படிப்பை முடித்த பின்னர் பண்டிட் பக்ஷிராஜ் வியாஸ் வித்யாலயாவில் ஆசிரியராகப் பணியாற் றினார். வேலையை ராஜினாமா செய்து விட்டு ப்ரசாரக் ஆனார்.
தொடக்கத்தில் ஒடிசாவில் பின்னர் விதர்ப ப்ராந்த (மாநில அமைப்பாளர்) ப்ரசாரக் காகவும் தொடர்ந்து நாக்பூர் மத்திய கார்யாலய ப்ரமுக் பொறுப்பில் பல வருடங்கள் இருந்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டதால் காப்ரி விவேகானந்த மெடிகல் மிஷன் மருத்துவ மனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் இறைவனடி சேர்ந்தார்.
ஸ்வயம்சேவகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செய்வதற்காக நாக்பூர் மஹால் காரியால யத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
ஶ்ரீ பிரபாகர் ராவ் ஆம்புல்கர் அவர்களுக்கு நமது அஞ்சலிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here