ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ஆர்.எஸ்.எஸ் ஆறுதல்

0
95

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டணம் அருகில் வேலம்பட்டி கிராமத்தில் தி.மு.க கவுன்சிலர், அவரது மகன் மற்றும் அக்கட்சியின் குண்டர்களால் அடித்துக் கொலைசெய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் வீட்டிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிர்வாகிகள் சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர். பிரபுவின் தந்தை மாதையன், தாய் கண்ணம்மா, பிரபுவின் மனைவி புனிதா, பிரபுவின் அண்ணனும்ராணுவ வீரருமாகிய பிரபாகர் மற்றும் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர். ஆர்.எஸ்.எஸ். கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் சங்கர்லால், மாவட்ட இணைச் செயலாளர் கணேசன், மாவட்ட மக்கள் தொடர்பாளர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த், மாநில இணை மக்கள் தொடர்பாளர் இராம இராஜசேகர் ஆகியோர் பிரபு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு பிரபுவின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஆன்மா நற்கதியடைய கூட்டு பிரார்த்தனையும் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here