சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை : ஜெய்சங்கர்

0
107

உள்நாட்டு மோதல் உச்சத்தில் உள்ள ஆஃப்ரிக்க நாடான சூடானில் இந்தியர்களை பாதுகாக்க சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
சூடானில் ராணுவத்தினருக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையிலான மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை 270க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், இந்த நாடுகள் போதிய உதவியை வழங்க உறுதியளித்ததாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here