மியான்மருக்கு உதவிக்கரம் நீட்டிய பாரதம்

0
153

மோச்ச (Mocha) புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களின் துயர் துடைக்க பாரத அரசு வழக்கம் போல் முதலில் சென்று உதவி புரிந்துள்ளது.

ஆபரேஷன் கருணா என்ற பெயரில் நிவாரணப் பொருட்களுடன் 3 பாரத கடற்படைக் கப்பல்கள் யாங்கோன் (Yangon) சென்று அடைந்துள்ளது.

உணவுப் பொருட்கள், மருந்துகள், உடைகள், நாப்கின்ஸ், சுகாதாரப் பொருட்கள், குடியிருப்புகள் அமைத்திடத் டென்ட் பொருட்கள், சிறிய ஜெனரேட்டர்கள், பம்ப் செட்கள், போன்ற பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாளை 4 வது கப்பல் மேலும் தேவைப்படும் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மியான்மர் செல்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here