இந்தியா-அமெரிக்கா உறவு வலுவாக உள்ளது – வெள்ளை மாளிகை அறிக்கை

0
128

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப்பயணமாக கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதோடு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்தியாவுடனான உறவு முன்னெப்போதையும் விட வலுவடைந்துள்ளது நாங்கள் பல முக்கிய ஒப்பந்தங்களை அறிவித்தோம். அவற்றில் சில செயல்படுத்தப்படுகின்றன. நமது நீண்ட கால எதிர்காலம் மற்றும் இந்தியாவுடனான உறவு தொடர்பாக நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்து வருகிறோம்.அது தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here