இந்திய இராணுவ சீருடையுடன் 4 பேர் கைது

0
122

இந்திய இராணுவ உளவுத் துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் ராஜஸ்தான் போக்ரான் பகுதியில் கார் ஒன்றில் 91 புதிய இராணுவ சீருடை செட்டுகள் சிக்கின. சீருடையுடன் புதிய ஹெல்மெட்கள், ஷூ, பெல்ட் & க்ளவுஸ் ஆகியவற்றுடன் மேலும் பல பொருட்கள் பிடிபட்டன. காரில் பிடிபட்ட 4 பேரைக் கைது செய்த இராணுவ உளவுத் துறையினர் விசாரணைக்குப் பின்னர் அவர்களை உள்ளூர் போலீஸ் வசம் ஒப்படைத்தனர். ராஜஸ்தான் சூரத்கரில் உள்ள ஒரு கடையிலிருந்து பொருட்களை வாங்கியுள்ள இவர்கள் ஜெய்சல்மேர் போகும் வழியில் சோதனையின் போது பிடிபட்டனர். எதற்காக இராணுவத்தினர் அணியும் சீருடைகள் வாங்கப்பட்டன? நோக்கம் என்ன? விசாரணை . ஜெய்சல்மேர் பாகிஸ்தான் எல்லைப் பகுதியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here