காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல் – பிரதமர் வருத்தம்

0
101

காசா பகுதியில் உள்ள அஹில் அராப் என்ற மருத்துவமனை மீது ராக்கெட் குண்டு விழுந்ததால் அங்கு சிகிச்சை பெற்று வந்த 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது: காசாவில் உள்ள அல் அஹில் மருத்துவமனையில் 500 பேர் உயிர் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். நடந்துகொண்டிருக்கும் மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகள் கவலைக்குரிய விஷயமாகும். சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here