எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தியது இந்திய ராணுவம்.

0
198

நமது இந்திய ராணுவ வீரரான மன்தீப் சிங் நெகி அவர்களுக்கு இந்திய ராணுவம் சார்பாக வீரஅஞ்சலி செலுத்தப்பட்டன.

நமது இந்திய ராணுவ வீரரான மன்தீப் சிங் நெகி அவர்கள் இந்திய எல்லையின் உயரமான பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது மோசமான வானிலை காரணமாக இடி மின்னல்கள் தாக்கி வீரமரணம் அடைந்துள்ளார்.

அவரது தைரியமும் தேசபக்தியும் போற்றுதலுக்குரியது. அவரது பூதவுடல், அவரது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம், பௌரி மாவட்டம், கார்காவல் பகுதிக்கு நல்லடக்கம் செய்ய ராணுவ மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டன. என ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தகவல்: நந்திஹனுமன்
nanthihanuman@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here