பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி.

0
133

கையால் துாக்கிச்  சென்று பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றது.


டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, நவீன ஏவுகணை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கையால் துாக்கிச் சென்று இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணையை அது வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.

இது பற்றி டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தியாவின் ஏவுகணை திட்டத்தில், இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். இந்த ஏவுகணை விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது. இந்த வகை ஏவுகணைகளை போர்க் காலங்களில் கையால் துாக்கிச் சென்று, இலக்கை நோக்கி தாக்கி அழித்திட முடியும். இது, தற்சார்பு இந்தியா இயக்கத்துக்கு வலு சேர்த்துள்ளது’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here